அடுத்த மாதம் முதல் 'சலார் 2' படப்பிடிப்பு ? | புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு தன்னம்பிக்கை ஊட்டிய சமந்தா | பேபி ஜான் படத்தில் சல்மான்கான் - அட்லி | அடுத்தவர்களின் கருத்துக்களை தூக்கி சுமக்காதீர்கள் : விமர்சனங்களுக்கு த்ரிஷா பதிலடி | சசி குமாருக்கு ஜோடியாக சிம்ரன் | முதல் முறையாக யுவன் இசையில் பாடிய சந்தோஷ் நாராயணன் | வினோத் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் | கூலி படத்தில் இணைந்த விக்ரம் பட பிரபலம் | சரண்யா துராடிக்கு காலில் காயம் | இது டிம்பிள் வீடு : சூட்டிங் வீட்டின் நினைவுகளை பகிரும் நீலிமா |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். தற்போது அவர் பா.ஜ.க சார்பில் திருச்சூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார்.
கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள லூர்து மாதா தேவாலயத்தில் அன்னை மேரியின் சிலைக்கு தங்க கிரீடம் வழங்குவதாக சுரேஷ் கோபி அறிவித்து தனது மனைவி ராதிகா மற்றும் மகள் பாக்யாவுடன் சென்று தங்க கிரீடத்தை மாதா சிலைக்கு அணிவித்தார்.
தற்போது அது தங்க கிரீடம் இல்லை என்றும் செம்பு பூசப்பட்ட கிரீடம் என்றும் சர்ச்சை கிளம்பி உள்ளது. பொதுவாக தங்க கிரீடம், தங்க பதக்கம் என்பதெல்லாம் 100 சதவிகித தங்கத்தில் செய்யப்படுவதில்லை. தங்க முலாம் பூசப்பட்டே தயாரிப்பார்கள். இதனால் அந்த கிரீடம் தங்க முலாம் பூசப்பட்டதா? அல்லது தங்க வர்ணம் பூசப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த விஷயத்தை பூதாகரமாக்கி வருகிறது.