இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். தற்போது அவர் பா.ஜ.க சார்பில் திருச்சூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார்.
கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள லூர்து மாதா தேவாலயத்தில் அன்னை மேரியின் சிலைக்கு தங்க கிரீடம் வழங்குவதாக சுரேஷ் கோபி அறிவித்து தனது மனைவி ராதிகா மற்றும் மகள் பாக்யாவுடன் சென்று தங்க கிரீடத்தை மாதா சிலைக்கு அணிவித்தார்.
தற்போது அது தங்க கிரீடம் இல்லை என்றும் செம்பு பூசப்பட்ட கிரீடம் என்றும் சர்ச்சை கிளம்பி உள்ளது. பொதுவாக தங்க கிரீடம், தங்க பதக்கம் என்பதெல்லாம் 100 சதவிகித தங்கத்தில் செய்யப்படுவதில்லை. தங்க முலாம் பூசப்பட்டே தயாரிப்பார்கள். இதனால் அந்த கிரீடம் தங்க முலாம் பூசப்பட்டதா? அல்லது தங்க வர்ணம் பூசப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த விஷயத்தை பூதாகரமாக்கி வருகிறது.