மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
மலையாள நடிகர் பிரித்விராஜ் தற்போது முன்னணி நடிகராக மட்டுமல்ல, ஒரு வெற்றிகரமான இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வருகிறார். மறைந்த நடிகர் சுகுமாரன் மற்றும் நடிகை மல்லிகா தம்பதியினரின் இளைய வாரிசு தான் பிரித்விராஜ். இவரது அண்ணன் இந்திரஜித்தும் நடிகராக இருக்கிறார். இந்த நிலையில் பிரித்விராஜின் அம்மா தனது 50வது வருட திரையுலக பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதற்காக சமீபத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நடிகர் பிரித்விராஜ் பேசும்போது, “எனது தந்தை இறந்த சமயத்தில் நானும் என் அண்ணனும் என் அம்மா என்ன செய்யப் போகிறாரோ என்று தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று நாங்கள் இந்த இடத்தில் இருக்கிறோம் என்றால் அதுதான் எங்கள் அம்மா தனி ஆளாக நின்று சாதித்தது. சினிமாவில் 50 வருட பயணத்தை தொட்டுள்ளார். இடையில் சில காலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தாலும் இப்போது முழுமூச்சுடன் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல எனது அம்மாவுடன் நடித்தது, ஒரு டைரக்டராக அவரை இயக்கியது, ஒரு தயாரிப்பாளராக அவருடைய படத்தை தயாரித்தது என வேறு எந்த ஒருவருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு மட்டுமே கிடைத்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.