லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கேரள மாநிலத்தில் கேஎஸ்ஆர்டிசி என்கிற பெயரில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நவீனமயமாக்கப்பட்ட சுமார் 100 பேருந்துகளுக்கு மேல் பயணிகளுக்காக விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மக்களிடம் கேரள அரசு பேருந்து போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக கேரள அரசு போக்குவரத்து கழகம் 'ட்ரான்ஸ்போ 25' என்கிற புதிய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. இதில் ஓர்மை எக்ஸ்பிரஸ் (ஞாபக எக்ஸ்பிரஸ்) என்கிற பெயரில் ஒரு துணை பிரச்சாரத்தையும் துவங்கி வைத்துள்ளார் கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சரும் நடிகருமான கே.பி.கணேஷ் குமார்.
இதனை தொடர்ந்து மோகன்லால், இயக்குனர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இந்த அரசு பேருந்து கண்காட்சியை பார்வையிட்டதுடன் அந்த பேருந்துகளில் ஏறி சுற்றி பார்த்து தங்களது இளமைக்கால அரசு பேருந்து அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். அப்போது மோகன்லால் கூறும்போது, “நான் கல்லூரியில் படிக்கும்போது எப்போதுமே கேரள அரசு பேருந்தில் பயணிப்பதை தான் அதிகம் விரும்புவேன்” என்று கூறினார்.
அப்போது உடன் இருந்த இயக்குனர் பிரியதர்ஷன், “அந்த காலகட்டத்தில் நாங்கள் இருவருமே ஒரே பேருந்தில் தான் இணைந்து பயணிப்போம். நான் செங்களூர் ஜங்ஷனில் ஏறுவேன். எதிர்கால சூப்பர் ஸ்டாரான மோகன்லால். பூஜப்புராவில் ஏறுவார். அவர் எம்ஜி காலேஜில் படித்தார். நான் அப்போது யுனிவர்சிட்டி காலேஜில் படித்தேன். பெரும்பாலும் நாங்கள் இருவரும் பஸ்ஸுக்குள் இருந்து பயணிப்பதை விட, படிக்கட்டில் நின்றுகொண்டு பயணித்தது தான் அதிகம்” என்று தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.