காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

இங்கே தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது பற்றி கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக பரபரப்பு ஓடிக் கொண்டிருக்க, அங்கே மலையாளத்திலும் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பிரித்விராஜ் டைரக்ஷனில் மோகன்லால் நடித்த எம்புரான் படம் கூட சென்சாரில் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து தான் வெளியானது. ஆனால் ஹிருதயபூர்வம் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க படத்தின் இயக்குனர் சத்யன் அந்திக்காடு தான் காரணம்.
ஏனென்றால் குடும்பப்பாங்கான படங்களை இயக்குவதற்கு பெயர் போனவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. இவர்கள் இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். 'என்னும் எப்பொழுதும் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரது கூட்டணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. வரும் மார்ச் 28ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.