மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல நடிகராக வலம் வருபவர் சுரேஷ் கோபி. தமிழில் விஜயகாந்த் போல, மலையாளத்தில் ஆக்ஷன் ஹீரோ என பெயர் பெற்ற இவர் கடந்த சில வருடங்களாக குறைந்த அளவிலேயே படங்களில் நடித்து வருகிறார். காரணம் பா.ஜ., கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்.பியாகவும் பொறுப்பு வைத்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி தலைமையில் சுரேஷ் கோபியின் மூத்த மகள் பாக்யாவுக்கும் ஸ்ரேயாஸ் மோகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தனது மகளின் திருமணத்திற்கு ஏற்கனவே கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு சுரேஷ்கோபி அழைப்பு விடுத்திருந்த நிலையில் மணமக்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது சுரேஷ் கோபியின் வீட்டிற்கே வந்து மீண்டும் மணமக்களை வாழ்த்தியுள்ளார். சுரேஷ் கோபியும் கவர்னருக்கு சிறப்பான விருந்தோம்பல் செய்து அவரை கவுரவித்தார். கடந்த சில தினங்களாக கேரளாவில் ஆளும் அரசுடன் எதிர்ப்பு போக்கை கடைபிடித்து வரும் கவர்னர், மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுரேஷ்கோபியின் வீட்டிற்கே வந்து சென்றுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.