திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த 2021ல் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த ரிஷப் ஷெட்டியே இந்த படத்தை இயக்கியும் இருந்தார். கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை மையப்படுத்தி, பூர்வகுடிகளின் நில உரிமை பற்றி பேசி இருந்த இந்தப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் வரவேற்பை பெற்றது
குறிப்பாக இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த ரிஷப் ஷெட்டி, கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற தெய்வ கோலா (பூத கோலா) என்கிற பண்டிகையின் போது சாமி ஆடுபவராக கொஞ்ச நேரமே வந்து செல்லும் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதுமட்டுமல்ல படத்தில் அவர் நடித்த அந்த தெய்வ கோலா நிகழ்ச்சியும் அதன் பின்னணியில் ஒலித்த பாடலும் இசையும் ரசிகர்களை மெய் மறக்க செய்தது.
இந்த நிலையில் தற்போது மங்களூரில் அதேபோன்று சமீபத்தில் நடைபெற்ற தெய்வ கோலா நிகழ்ச்சியில் ரிஷப் ஷெட்டி நேரில் கலந்து கொண்டார்.. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.