விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
மலையாள திரையுலகில் சீனியர் இயக்குனர்களில் முக்கியமானவர் சத்யன் அந்திக்காடு. அவரது மகன்களான அனூப் சத்யன், துல்கர் சல்மான் நடித்த வரனே ஆவிஷ்யமுண்டு படம் மூலமாகவும், அகில் சத்யன் பஹத் பாஸில் நடித்த பாச்சுவும் அற்புத விளக்கும் படம் மூலமாகவும் இயக்குனர்களாக அறிமுகமானவர்கள். இந்த நிலையில் அகில் சத்யன் அடுத்ததாக நிவின்பாலி நடிக்கும் ஒரு பேண்டஸி ஹாரர் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஒரு பேயும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெறுகிறது.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த படத்திற்கான கதையை உருவாக்க ஒரு வருடத்திற்கு முன்பே வேலையை துவங்கி விட்டேன். ஆனால் எனக்கும் நிவின்பாலிக்கும் பேய் என்றாலே பயம். அதனால் என்னை நானே பயமாக கூடாது என்பதற்காக பகலில் மட்டுமே இந்த படத்தின் கதையை எழுதினேன். இது வெறும் ஹாரர் படம் மட்டுமல்ல.. பேண்டஸி படமும் கூட..” என்று கூறியுள்ளார் அகில் சத்யன்.