நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிருத்விராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜன கண மன' திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. அடுத்து அவர் இயக்க இருக்கும் படம் பற்றி எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தது. இந்த நிலையில் அவர் நிவின் பாலியுடன் அடுத்த படத்தை இயக்குகிறார். படத்திற்கு 'மலையாளி பிரம் இந்தியா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி, நடிகர் நிவின் பாலியை ஜிம்மில் சந்தித்து கதை சொல்கிறார். அதற்கு நிவின் பாலி பல கேள்விகளை கேட்கிறார். இந்த கேள்வி பதில் வாயிலாக படம் பற்றிய தகவல்கள் காமெடியாக பகிரப்படுகிறது. கடைசியாக படத்தின் டைட்டிலை கேட்கிறார் நிவின் பாலி அதற்கு 'மலையாளி பிரம் இந்தியா' என்று சொல்கிறார். இந்தியாவா? பாரதமா? என்று கேட்கிறார் நிவின். இப்படி கடைசியாக அரசியல் பன்ஞ்சோடு முடிகிறது டைட்டில் வீடியோ. இது இப்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த படத்தில் நிவின் பாலி தவிர, தயன் ஸ்ரீனிவாசன், அனஸ்வாரா ராஜன், ஷைன் டைம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.