‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக இரண்டு படங்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. அதில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன் படம் ஒன்று. மற்றொன்று ஏற்கனவே திரிஷ்யம், டுவல்த் மேன் என தொடர்ந்து வெற்றிக்கூட்டணியாக வலம் வரும் ஜீத்து ஜோசப்பின் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ள ‛நேர்' திரைப்படம். இந்த படம் முழுக்க முழுக்க நீதிமன்றத்தை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது. மோகன்லால் இதில் வழக்கறிஞராக நடித்துள்ளார். கதாநாயகியாக இன்னொரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்துள்ளார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தில் நடப்பதாகவும், ஒரு முக்கிய வழக்கை துவங்கி அதன் பின்னணியில் ஒளிந்துள்ள குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான மோகன்லால் நடத்தும் சட்டப் போராட்டம் தான் இந்த படம். வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் மோகன்லால். அந்த வகையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் தனது நீண்டநாள் ஆன்லைன் நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு நேரில் வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து குரூப் செல்பி எடுத்து அனைவரையும் மகிழ்வித்துள்ளார். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் மோகன்லால்.