2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கடந்த வருடம் மிகச்சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் மலையாளத்தில் வாரிக்குவித்த படம் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'. அறிமுக இயக்குனர் விபின் தாஸ் என்பவர் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அவர் 'குருவாயூர் அம்பலநடையில்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தில் கதாநாயகனாக நடித்தவரும் மின்னல் முரளி பட இயக்குனருமான பஷில் ஜோசப் கதாநாயகனாக நடிக்க, மிக முக்கியமான வேடத்தில் நடிகர் பிரித்விராஜ் இதில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் பெரும்பாவூர் பகுதியில் ஒரு மிகப்பெரிய தனியார் இடத்தில் குருவாயூர் கோவில் போன்று செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் இந்த இடத்தில் செட் அமைப்பதற்காக முறைப்படி நகராட்சியில் அனுமதி பெறவில்லை எனக் கூறி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதுடன் செட் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த இடத்துக்கு சொந்தக்காரரோ, நகராட்சியில் உள்ள ஒரு சில அதிகாரிகள் தன்மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்று செட் அமைக்கும் பணியை முடக்கி உள்ளனர் என்று கூறியுள்ளார்.