ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

'லக்கி பாஸ்கர்' படம் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு, அதன் பிறகு மலையாளத்தில் அவர் தயாரித்த 'லோகா சாப்டர் ஒன்' படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார். தமிழில் தற்போது அவர் தயாரித்து நடித்திருக்கும் 'காந்தா' என்ற படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரியாணி அரிசி நிறுவனத்திற்கு விளம்பர தூதராகவும் செயல்பட்டு வருகிறார் துல்கர் சல்மான். அந்த நிறுவனத்தின் பிரியாணி அரிசியை சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனம் திருமண நிகழ்ச்சியில் சமைத்துள்ளார்கள். ஆனால் அந்த பிரியாணியை சாப்பிட்ட பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தற்போது அந்த பிரியாணி அரிசி நிறுவனத்திற்கு மட்டுமின்றி அதில் விளம்பர தூதராக இருக்கும் நடிகர் துல்கர் சல்மான் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.