ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

'லக்கி பாஸ்கர்' படம் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு, அதன் பிறகு மலையாளத்தில் அவர் தயாரித்த 'லோகா சாப்டர் ஒன்' படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார். தமிழில் தற்போது அவர் தயாரித்து நடித்திருக்கும் 'காந்தா' என்ற படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரியாணி அரிசி நிறுவனத்திற்கு விளம்பர தூதராகவும் செயல்பட்டு வருகிறார் துல்கர் சல்மான். அந்த நிறுவனத்தின் பிரியாணி அரிசியை சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனம் திருமண நிகழ்ச்சியில் சமைத்துள்ளார்கள். ஆனால் அந்த பிரியாணியை சாப்பிட்ட பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தற்போது அந்த பிரியாணி அரிசி நிறுவனத்திற்கு மட்டுமின்றி அதில் விளம்பர தூதராக இருக்கும் நடிகர் துல்கர் சல்மான் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.




