காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் 'தி ராஜா சாப்' எனும் படத்தில் நடித்துள்ளார் . இதில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என மூவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதற்கான விளம்பர நிகழ்ச்சிகளை படக்குழு கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மாளவிகா மோகனன் தற்போது தெலுங்கில் அளித்த பேட்டியில் 'தி ராஜா சாப்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மாளவிகா மோகனன் கூறியதாவது, ''கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் எனது முதல் படமாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு காதல் கதையுடன் அமையவிருந்தது. ஆனால், அந்த காலகட்டத்தில் விஜய் தேவரகொண்டா 'லைகர்' எனும் படத்தில் நடிப்பதற்காக ஆர்வமாக இருந்ததால் இந்த படத்தை விட்டு விலகினார். இதனால் தான் தனது தெலுங்கு அறிமுகம் தள்ளிப் போனது'' எனத் தெரிவித்துள்ளார்.




