ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாள திரையுலகை பொருத்தவரை சமீப காலமாக வியாபார எல்லையில் விரிவாக்கம் அடைந்துள்ளதுடன் வசூலிலும் மிகப்பெரிய இலக்கை எட்டிப்பிடிக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் இந்த வருடம் மே மாதம் வெளியான ‛2018' திரைப்படம் 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்த முதல் மலையாள படம் என்கிற பெயரை பெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஆர்.டி.எஸ் என்கிற திரைப்படம் சமீபத்தில் தான் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இத்தனைக்கும் இந்த படம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் நடிப்பில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த வாரம் மம்முட்டி நடிப்பில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற திரைப்படம் வெளியானது. முதல் நாளிலிருந்து வரவேற்பை பெற்ற இந்தப்படம் ஒரு வாரத்திற்குள்ளாகவே தற்போது 50 கோடி வசூலை எளிதாக கடந்துள்ளது. இதற்கு முந்தைய மம்முட்டியின் சில படங்கள் போட்ட முதலீட்டை எடுப்பதற்கே போராடி வந்த நிலையில் கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் வசூல் சாதனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ள இந்த படம் கிட்டத்தட்ட தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் போல வட மாநில குற்றவாளிகளை தேடிச் சென்று வேட்டையாடும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையாக உருவாகி இருக்கிறது. படம் விறுவிறுப்பாக இருப்பதால் தற்போது கூட பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது.