தமிழில் மற்ற மொழி நிறுவனங்களின் ஆதிக்கம் | வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் | தீபாவளி தினத்தில் சூர்யாவும், கார்த்தியும் நேரடியாக மோதிக் கொள்கிறார்களா? | 'விடாமுயற்சி'யை விட 'குட் பேட் அக்லி' குறைவான டிக்கெட் புக்கிங்! | நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம் | குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் | ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு |
மலையாள திரையுலகை பொருத்தவரை சமீப காலமாக வியாபார எல்லையில் விரிவாக்கம் அடைந்துள்ளதுடன் வசூலிலும் மிகப்பெரிய இலக்கை எட்டிப்பிடிக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் இந்த வருடம் மே மாதம் வெளியான ‛2018' திரைப்படம் 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்த முதல் மலையாள படம் என்கிற பெயரை பெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஆர்.டி.எஸ் என்கிற திரைப்படம் சமீபத்தில் தான் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இத்தனைக்கும் இந்த படம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் நடிப்பில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த வாரம் மம்முட்டி நடிப்பில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற திரைப்படம் வெளியானது. முதல் நாளிலிருந்து வரவேற்பை பெற்ற இந்தப்படம் ஒரு வாரத்திற்குள்ளாகவே தற்போது 50 கோடி வசூலை எளிதாக கடந்துள்ளது. இதற்கு முந்தைய மம்முட்டியின் சில படங்கள் போட்ட முதலீட்டை எடுப்பதற்கே போராடி வந்த நிலையில் கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் வசூல் சாதனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ள இந்த படம் கிட்டத்தட்ட தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் போல வட மாநில குற்றவாளிகளை தேடிச் சென்று வேட்டையாடும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையாக உருவாகி இருக்கிறது. படம் விறுவிறுப்பாக இருப்பதால் தற்போது கூட பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது.