ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள திரையுலகில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக பிசியாக நடித்து வருபவர் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர் நேற்று முன் தினம் தனது காரில் திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த இப்போது எதிரே இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்த விபத்தில் இளைஞருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த இளைஞர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காயம் எதுவும் இன்றி தப்பிய நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மருத்துவமனைக்கு உடன் சென்று அடிபட்ட நபருக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சுராஜ் வெஞ்சாரமூடு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளனர்.