மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
பாலிவுட்டில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலுமே முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவராக இருப்பவர் ஏக்தா கபூர். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து வந்த இவரது கவனம் தற்போது தென்னிந்திய திரையுலகம் பக்கம் திரும்பி உள்ளது. அந்த வகையில் இவர் தனது தயாரிப்பில் அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் பான் இந்திய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு விருஷபா என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் போட்டோ சூட்டில் கலந்து கொள்வதற்காக மும்பை வந்துள்ள மோகன்லால், அதற்காக பிரபலமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவிற்கு காரில் வருகை தந்த வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் கதை, தான் தயாரிப்பதற்காக வாங்கி வைத்துள்ள ஒரு நாவலின் கதை என ஏக்தா கபூர் வழக்குத் தொடர்ந்ததும், ஆனால் இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு சாதகமாக அந்த வழக்கின் தீர்ப்பு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.