கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் |
பாலிவுட்டில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலுமே முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவராக இருப்பவர் ஏக்தா கபூர். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து வந்த இவரது கவனம் தற்போது தென்னிந்திய திரையுலகம் பக்கம் திரும்பி உள்ளது. அந்த வகையில் இவர் தனது தயாரிப்பில் அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் பான் இந்திய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு விருஷபா என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் போட்டோ சூட்டில் கலந்து கொள்வதற்காக மும்பை வந்துள்ள மோகன்லால், அதற்காக பிரபலமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவிற்கு காரில் வருகை தந்த வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் கதை, தான் தயாரிப்பதற்காக வாங்கி வைத்துள்ள ஒரு நாவலின் கதை என ஏக்தா கபூர் வழக்குத் தொடர்ந்ததும், ஆனால் இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு சாதகமாக அந்த வழக்கின் தீர்ப்பு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.