300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மலையாளத் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளாக, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் லீம்குமார். இடையில் சில காலம் உடல்நிலை சரியில்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர், பின்னர் முன்பு போல மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இயக்குனராக மாறி ஒரு படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் சலீம் குமாரின் வாழ்க்கை வரலாறு 'ஈஸ்வரா வழக்கில்லல்லோ' என்கிற பெயரில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் சலீம்குமாரின் சொந்த ஊரான வட பரவூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் குஞ்சாகோ போபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டார். நடிகரும், இயக்குனருமான ரமேஷ் பிஷரோடி இந்த புத்தகத்தை பெற்றுக் கொண்டார். இந்த புத்தகத்திற்கு வைக்கப்பட்டுள்ள அதே தலைப்பில் சலீம்குமார் ஒரு படத்தை இயக்க இருந்ததாகவும் அந்த படத்தில் தான் நடிக்க இருந்ததாகவும் கூறிய ரமேஷ் பிஷரோடி, அதன் பிறகு சலீம்குமாரின் உடல்நிலை காரணமாக தாங்கள் எல்லாம் சேர்ந்து அவரை படம் இயக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாக கூறினார். அதனால் அந்த படத்திற்கான தலைப்பையே இந்த புத்தகத்திற்கு வைத்துவிட்டதாகவும் ஒரு புதிய தகவலை அவர் தெரிவித்தார்..