300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மலையாளத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் வெளியான படம் அய்யப்பனும் கோஷியும். அந்தப்படத்தில் ஹீரோக்களை சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தாலும் பிஜு மேனனின் மனைவியாக ஆதிவாசி இனத்தை சேர்ந்த துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்திருந்தார் நடிகை கவுரி நந்தா. அந்த படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. இவர் தற்போது சொர்க்கத்திலே கட்டெறும்பு என்ற படத்திலே நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பியும், நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் டிராமா படத்தின் இயக்குனருமான தயன் ஸ்ரீனிவாசன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஜீப் ஒன்றில் கவுரி நந்தா பயணிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஜீப்பை ஓட்டிய நடிகரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகில் இருந்த மின்சார கம்பத்தின் மீது மோதியது. நல்ல வேலையாக அதில் பயணித்த கவுரி நந்தா உட்பட நால்வரும் உடனடியாக வண்டியை விட்டு இறங்கி விட்டனர். ஜீப் மெதுவான வேகத்தில் சென்றதால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தன்னிடம் விசாரித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார் கவுரி நந்தா.