ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர் | மஹாராஜா 2ம் பாகத்திற்கு தயாராகும் விஜய்சேதுபதி | ஆரி அர்ஜுனனின் 'போர்த் புளோர்' | பிளாஷ்பேக் : படப்பிடிப்பு தவறாக நடந்ததால் பாட்டை மாற்றிய இளையராஜா | பிளாஷ்பேக் : எம்ஜிஆருக்கு பதில் நடித்த சிவாஜி | ஜனநாயகன்: வழக்கு போடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' லிரிக் வீடியோ | விபீஷணனாக நடிக்கவில்லை ; விஜய்சேதுபதி திட்டவட்டம் | மோகன்லால் மம்முட்டிக்கு நான் வில்லன் தான் ; உறுதி செய்த பஹத் பாசில் | பிப்ரவரி 26ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம்? |

2021ஆம் வருடத்திற்கான கேரள சர்வதேச திரைப்பட விழா நேற்று சம்பிரதாய துவக்க விழா பூஜையுடன் துவங்கியுள்ளது. கொச்சியில் நடைபெற்ற இந்த விழாவில் தன்னை அழைக்காமல் விழாக்குழுவினர் அவமதித்து விட்டார்கள் என தேசிய விருதுபெற்ற பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம்குமார் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “வயதானவன் என காரணம் காட்டி இந்த விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு அனுப்பாமல் அவமரியாதை செய்துள்ளனர். என்னைவிட ஓரிரு வயதே குறைவான, கல்லூரியில் எனது ஜூனியர்களாக படித்த இயக்குனர் அமல் நீரத், ஆஷிக் அபு ஆகியோரை எல்லாம் அனுமதித்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால், தேசிய விருது பெற்ற எனக்குத்தான் இந்த விழாவில் கலந்துகொள்ள அதிக உரிமை இருக்கிறது. என்ன செய்வது இங்கேயும் அரசியல் நுழைந்து விட்டது” என வருத்தத்துடன் கூறியுள்ளார் சலீம்குமார்.




