அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
2021ஆம் வருடத்திற்கான கேரள சர்வதேச திரைப்பட விழா நேற்று சம்பிரதாய துவக்க விழா பூஜையுடன் துவங்கியுள்ளது. கொச்சியில் நடைபெற்ற இந்த விழாவில் தன்னை அழைக்காமல் விழாக்குழுவினர் அவமதித்து விட்டார்கள் என தேசிய விருதுபெற்ற பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம்குமார் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “வயதானவன் என காரணம் காட்டி இந்த விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு அனுப்பாமல் அவமரியாதை செய்துள்ளனர். என்னைவிட ஓரிரு வயதே குறைவான, கல்லூரியில் எனது ஜூனியர்களாக படித்த இயக்குனர் அமல் நீரத், ஆஷிக் அபு ஆகியோரை எல்லாம் அனுமதித்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால், தேசிய விருது பெற்ற எனக்குத்தான் இந்த விழாவில் கலந்துகொள்ள அதிக உரிமை இருக்கிறது. என்ன செய்வது இங்கேயும் அரசியல் நுழைந்து விட்டது” என வருத்தத்துடன் கூறியுள்ளார் சலீம்குமார்.