'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

ஹிந்தியில் 'அனிமல்' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ரன்பீர் கபூர் நடிப்பில் புராண படமாக உருவாகி வருகிறது 'ராமாயணா'. இதில் ராமன் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதாவாக சாய் பல்லவியும் நடிக்கிறார்கள். ராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் நடிக்க இருக்கிறார். அது மட்டுமல்ல சன்னி தியோலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் விபீஷணன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதாக ஒரு தகவல் கடந்த சில நாட்களாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் பாலிவுட் நாளிதழ் ஒன்றுக்கு விஜய்சேதுபதி அளித்த பேட்டியில், “ராமாயணா படத்தில் விபீஷணனாக நான் நடிக்கவில்லை. அங்கிருந்து எனக்கு அப்படி எந்த ஒரு அழைப்பும் இதுவரை வரவில்லை” என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார்.