இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட படம் 'ட்வென்டி-20'. மலையாள சினிமாவின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களையும் இணைத்து இந்தப்படத்தை வெற்றிகரமாக இயக்கியவர் ஆக்ஷன் படங்களில் பிதாமகன் என அழைக்கப்படும் இயக்குனர் ஜோஷி. கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள ஜோஷி, மோகன்லால் மம்முட்டி, சுரேஷ்கோபி, திலீப் என முன்னணி ஹீரோக்களை வைத்தே படங்களை இயக்கியவர்.
எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு கட்டத்தில் ஏற்படும் இறங்குமுகத்தை போல, ஜோஷி கடைசியாக இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. இந்த நிலையில் சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்த இயக்குனர் ஜோஷியை மீண்டும் கைதூக்கி விடும் விதமாக அவரது படத்தில் நடிக்கிறார் சுரேஷ்கோபி. இந்த படத்திற்கு பாப்பன் என டைட்டில் வைக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.