இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட படம் 'ட்வென்டி-20'. மலையாள சினிமாவின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களையும் இணைத்து இந்தப்படத்தை வெற்றிகரமாக இயக்கியவர் ஆக்ஷன் படங்களில் பிதாமகன் என அழைக்கப்படும் இயக்குனர் ஜோஷி. கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள ஜோஷி, மோகன்லால் மம்முட்டி, சுரேஷ்கோபி, திலீப் என முன்னணி ஹீரோக்களை வைத்தே படங்களை இயக்கியவர்.
எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு கட்டத்தில் ஏற்படும் இறங்குமுகத்தை போல, ஜோஷி கடைசியாக இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. இந்த நிலையில் சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்த இயக்குனர் ஜோஷியை மீண்டும் கைதூக்கி விடும் விதமாக அவரது படத்தில் நடிக்கிறார் சுரேஷ்கோபி. இந்த படத்திற்கு பாப்பன் என டைட்டில் வைக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.