எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கொரோனா தாக்கம் ஓரளவு குறைந்த நிலையில், இந்த புது வருடம் நடிகர் விஜய்சேதுபதிக்குத்தான் வெகு சிறப்பாக துவங்கியுள்ளது என்று சொல்லலாம். கடந்த ஜனவரியில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யை விட விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் பெரிதும் பாராட்டு பெற்றது. அதை தொடர்ந்து இந்த வாரம் தமிழில் வெளியாகியுள்ள 'குட்டி ஸ்டோரி' என்கிற ஆந்தாலாஜி படத்திலும், தெலுங்கில் வெளியாகியுள்ள உப்பென்னா படத்திலும் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதில் மாஸ்டர் படத்தை போலவே உப்பென்னாவிலும் விஜய்சேதுபதியின் நடிப்பு தெலுங்கு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.
இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தற்போது கலந்துகொண்டு வரும், படத்தின் ஹீரோ வைஷ்ணவ் தேஜ் விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் பற்றி சிலாகித்து கூறி வருகிறார்.. “படப்பிடிப்பின்போது விஜய்சேதுபதி எனக்கு சின்னச்சின்னதாக நிறைய டிப்ஸ் கொடுத்தார். அதையெல்லாம் விட ஒரு காட்சியில் நடித்தபோது அது சிறப்பாக வரவில்லை என அவருக்கு தோன்றினால், மானிட்டரை எல்லாம் பார்க்க வரமாட்டார். அடுத்த ஷாட் எடுக்கலாம் என உடனே தயாராகி விடுவார். மானிட்டர் பார்க்க விரும்பாத அவரது இந்த அணுகுமுறையை பார்த்து நான் ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன்” என கூறியுள்ளார் வைஷ்ணவ் தேஜ்.