பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் மஹாராஜா. நிதிலன் சாமிநாதன் இயக்கிய இந்த படத்தில் விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், சஞ்சனா, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்தனார், படம் பெரிய வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து மஹாராஜா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விஜய்சேதுபதி விரும்பினார். அதற்காக கதை எழுதுமாறு நிதிலனிடம் கேட்டிருந்தார். தற்போது நிதிலன் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதிவிட்டார். விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களை முடித்து விட்டு மஹாராஜாவிற்கு வருகிறார்.
தற்போது விஜய்சேதுபதி தவிர்த்த மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. முதல் பாகத்தில் வில்லன் அனுராக் காஷ்யப்பின் மகளை விஜய்சேதுபதி தன் மகள் போன்று வளர்ப்பதாக முடிந்தது. இரண்டாம் பாகத்தில் அந்த மகளை கேட்டு அனுராக் காஷ்யப்பின் சகோதரன் வருவது போன்றும், விஜய்சேதுபதி, அவரது மகள், புதிய வில்லன் இந்த மூவரை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.




