ஆதிக் ரவிச்சந்திரன், ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை | குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை குழந்தையுடன் வந்து வாங்குறாங்க: பேரரசு கிண்டல் | விஜய் மேனேஜர் குறித்து நடிகை ஓவியா அதிரடி பதிவு | டிமாண்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல் | 'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு | ஜோதிகாவின் ஹிந்தி படம் 'சிஸ்டம்' : 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட் | பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர் | ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை | நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிய 'திரிஷ்யம்' பட நடிகை |

மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக திரிஷ்யம் 3 வரும் ஏப்-2ம் தேதியும், ‛பேட்ரியாட்' திரைப்படம் வரும் ஏப்., 23ம் தேதியும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதனை தொடர்ந்து மோகன்லாலின் 366வது படத்தை தொடரும் படத்தை இயக்கிய இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு மோகன்லால் நடிக்க இருக்கும் 367வது படத்தை மேப்படியான் என்கிற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்க உள்ளார்.
இந்த படத்தின் கதைக்களம் ராணுவ பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறைய முன் கட்ட தயாரிப்பு பணிகளை இயக்குனர் விஷ்ணு மோகன் மேற்கொண்டுள்ளார். படம் குறித்து அவர் கூறும்போது, “உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தான் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் வழக்கமான ஒரு ராணுவ படம் போல இது இருக்காது” என்றும் கூறியுள்ளார்.