Advertisement

சிறப்புச்செய்திகள்

லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

துல்கர் படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

14 ஏப், 2023 - 02:37 IST
எழுத்தின் அளவு:
Case-against-dulquer-salman-movie-is-dismissed

கடந்த 2021ல் துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் குறூப். கேரளாவில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு தான் இறந்ததாக நாடகமாடி, அதற்கான இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மோசடி செய்யும் முயற்சியில் தன்னைப்போன்ற தோற்றம் கொண்ட வேறு ஒரு நபரை கொலை செய்து பின்னர் அந்த வழக்கில் இருந்து தப்பிக்க வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலை மறைவானதாக சொல்லப்பட்ட சுகுமாரன் குறூப் என்கிற ஒரு குற்றவாளியின் கதையை தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

துல்கர் சல்மானை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான சமயத்திலேயே சுகுமார குரூப்பின் பெயரை கெடுக்கும் விதமாக இந்த படத்தை அவரது வாழ்க்கையை வைத்து படமாக்கி உள்ளார்கள் என்று கூறி இந்த படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனாலும் இந்த படத்தை வெளியிடுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து படம் வெளியானது. இந்த நிலையில் அந்த வழக்கு குறித்த மேல் விசாரணை தற்போது மீண்டும் கேரள உயர்நீதிமன்றத்தில் வந்தது.

அப்போது இது குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “இந்த படத்தில் எங்கேயும் சுகுமார குறூப் பற்றிய வாழ்க்கை வரலாறு பயன்படுத்தியதாக எதிர் தரப்பினர் நிரூபிக்கவில்லை. அது மட்டுமல்ல குற்றம் சாட்டப்பட்ட, குற்றவாளி என நிரூபணமான சுகுமார குறூப் பற்றிய செய்திகள் செய்தித்தாள்களிலும் நீதிமன்ற தீர்ப்புகளிலும் வெளியான ஒன்றுதான்.. பொதுவெளியில் வெளியான அந்த தகவல்களின் அடிப்படையில் தாங்களாகவே ஒரு புதிய கதையை உருவாக்கி படம் இயக்குவதற்கு யாரும் தடை போட முடியாது. அது மட்டுமல்ல இது போன்ற பிரச்சனைகள் எல்லாவற்றையும் அலசித்தான் சென்சார் போர்டு இந்த படத்தை வெளியிடுவதற்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்பிறகு இப்படி குற்றம் சாட்டி இருப்பது உள்நோக்கம் கொண்டது என்று கூறி இந்த வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காரின் பின்னாடியே ஓடி வந்த ரசிகை :  மஞ்சு வாரியர் அளித்த வாக்குறுதிகாரின் பின்னாடியே ஓடி வந்த ரசிகை : ... அனுபமா பரமேஸ்வரன் எங்கள் படத்தில் இருந்து விலகவில்லை ; ஹீரோ காட்டம் அனுபமா பரமேஸ்வரன் எங்கள் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in