இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மலையாள திரையுலகில் புதுப்புது நடிகைகள் அறிமுகமானாலும் இப்போதும் நடிகை மஞ்சு வாரியருக்கு மற்ற எல்லோரையும் விட அதிக அளவு ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் எரூர் என்கிற ஊரில் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மஞ்சு வாரியர். அவரைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். மேடையில் இருந்தபடியே அவர்களுடன் பிரம்மாண்ட செல்பி எடுத்துக்கொண்ட மஞ்சு வாரியர் அங்கிருந்து காரில் கிளம்பினார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த சாலையில் அவரது கார் மெதுவாக சென்றபோது காரை பின் தொடர்ந்து ஒரு இளம் பெண் ஓடி வருவதை பார்த்த மஞ்சு வாரியர் ஒரு ரசிகை என்கிற நிலையில் அவருக்கு ஒரு ஹாய் சொன்னார்.
ஆனாலும், தொடர்ந்து அந்த பெண் திரும்பவும் அந்த காரை துரத்தியபடி ஓடி வந்தார். நெரிசல் அதிகமாக இருந்தாலும் மீண்டும் காரை நிறுத்திய மஞ்சு வாரியரிடம், இரண்டு நிமிடம் ஒதுக்க முடியுமா என்று அந்த பெண் கேட்டுள்ளார். இருந்தாலும் காரை அங்கே சில நொடிகளுக்கு மேல் நிறுத்த வழியில்லாததால் அந்த பெண்ணிடம் காரில் இருந்தபடியே விபரம் கேட்க, தனது தாய் மஞ்சுவாரியரின் தீவிர ரசிகை என்றும் இன்று அவர் பிறந்த நாள் என்பதால் தொலைபேசியில் மஞ்சு வாரியர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னால் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்றும் அந்த இளம்பெண் கூறியுள்ளார்.
உடனே மஞ்சு வாரியர் தன் காரின் பின்னே தொடர்ந்து வந்து கொண்டிருந்த தனது உதவியாளரிடம் அந்த பெண்ணின் மொபைல் நம்பரை கொடுக்குமாறும் தான் வீட்டிற்கு சென்ற பின்னர் அவரை போனில் அழைத்து அவரது தாய்க்கு வாழ்த்துக்கள் கூறுவதாகவும் உறுதியளித்துவிட்டு கிளம்பினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அந்த ரசிகை மஞ்சு வாரியாரின் இந்த அன்பை அங்கிருந்த மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டார்