வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? |
மலையாள திரை உலகில் 35 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த ஆறேழு ஆண்டுகளாக அரசியலில் இறங்கிய சுரேஷ்கோபி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்பி ஆகவும் பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமல்ல ஆன்மிக விஷயங்களில் அதிக நாட்டம் செலுத்தி வரும் சுரேஷ்கோபி, அது தொடர்பான கருத்துக்களையும் அவ்வப்போது கூறி வருகிறார். அப்படி சமீபத்தில் மகா சிவராத்திரி அன்று அவர் பேசிய பேச்சு ஒன்று மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதாவது கடவுள் குறித்த நம்பிக்கை இல்லாதவர்கள் அழிவார்கள் என்று அவர் பேசியதாக ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுரேஷ்கோபி, “நான் அந்த நிகழ்வில் பேசிய முழுமையான பேச்சை வெளியிடாமல், தங்களுக்கு வேண்டியபடி வெட்டியும், ஒட்டியும் எடிட் செய்து என் மீது தவறான பிம்பம் உருவாக்க வேண்டும் என்பதற்காக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக எனது அன்பு எதிரிகள் இந்த வேலையை செய்துள்ளனர். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் குறித்தும் நான் மரியாதையை வைத்திருக்கிறேன். அதனால் ஒருபோதும் நான் அப்படி பேச வேண்டிய தேவையே இல்லை” என்று கூறியுள்ளார்.