என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாள திரை உலகில் 35 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த ஆறேழு ஆண்டுகளாக அரசியலில் இறங்கிய சுரேஷ்கோபி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்பி ஆகவும் பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமல்ல ஆன்மிக விஷயங்களில் அதிக நாட்டம் செலுத்தி வரும் சுரேஷ்கோபி, அது தொடர்பான கருத்துக்களையும் அவ்வப்போது கூறி வருகிறார். அப்படி சமீபத்தில் மகா சிவராத்திரி அன்று அவர் பேசிய பேச்சு ஒன்று மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதாவது கடவுள் குறித்த நம்பிக்கை இல்லாதவர்கள் அழிவார்கள் என்று அவர் பேசியதாக ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுரேஷ்கோபி, “நான் அந்த நிகழ்வில் பேசிய முழுமையான பேச்சை வெளியிடாமல், தங்களுக்கு வேண்டியபடி வெட்டியும், ஒட்டியும் எடிட் செய்து என் மீது தவறான பிம்பம் உருவாக்க வேண்டும் என்பதற்காக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக எனது அன்பு எதிரிகள் இந்த வேலையை செய்துள்ளனர். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் குறித்தும் நான் மரியாதையை வைத்திருக்கிறேன். அதனால் ஒருபோதும் நான் அப்படி பேச வேண்டிய தேவையே இல்லை” என்று கூறியுள்ளார்.