சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாள திரை உலகில் 35 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த ஆறேழு ஆண்டுகளாக அரசியலில் இறங்கிய சுரேஷ்கோபி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்பி ஆகவும் பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமல்ல ஆன்மிக விஷயங்களில் அதிக நாட்டம் செலுத்தி வரும் சுரேஷ்கோபி, அது தொடர்பான கருத்துக்களையும் அவ்வப்போது கூறி வருகிறார். அப்படி சமீபத்தில் மகா சிவராத்திரி அன்று அவர் பேசிய பேச்சு ஒன்று மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதாவது கடவுள் குறித்த நம்பிக்கை இல்லாதவர்கள் அழிவார்கள் என்று அவர் பேசியதாக ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுரேஷ்கோபி, “நான் அந்த நிகழ்வில் பேசிய முழுமையான பேச்சை வெளியிடாமல், தங்களுக்கு வேண்டியபடி வெட்டியும், ஒட்டியும் எடிட் செய்து என் மீது தவறான பிம்பம் உருவாக்க வேண்டும் என்பதற்காக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக எனது அன்பு எதிரிகள் இந்த வேலையை செய்துள்ளனர். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் குறித்தும் நான் மரியாதையை வைத்திருக்கிறேன். அதனால் ஒருபோதும் நான் அப்படி பேச வேண்டிய தேவையே இல்லை” என்று கூறியுள்ளார்.