எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மலையாள நடிகர் பஹத் பாசில் இரண்டு வருடங்களில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் புஷ்பா, விக்ரம் என மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்து கிட்டத்தட்ட பான் இந்தியா நடிகர் என்கிற அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். கன்னடத்தில் இருந்தும் அவரைத்தேடி பட வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் தற்போது வருமானவரித்துறையினர் அவர்களது சில சந்தேகங்களுக்கு பஹத் பாசிலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி சம்மர் அனுப்பி உள்ளனர்.
குறிப்பாக பஹத் பாசில் ஒடிடியில் வெளியான படங்களில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை மற்றும் அவர் தயாரிப்பாளராக உள்ள தயாரிப்பு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் ஆகியவற்றில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதற்காகவே அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இதேபோன்று நேரிலேயே ஆஜரான மோகன்லாலிடமும் வருமான வரித்துறையினர் அவரது கணக்கு வழக்குகள் குறித்த சந்தேகங்களை கேட்டு அந்த விளக்கங்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.