சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியில் சிறந்த இயக்குனராக மாதவன் தேர்வு | சீதை வேடத்தில் நடிக்க அசைவம் தவிர்த்தேன்: கீர்த்தி சனோன் | ஓடிடி வருகையை அன்றே அறிந்தவன் நான்: கமல்ஹாசன் பெருமை | பார்லி., புதிய கட்டடம்! வீடியோ வெளியிட்ட ஷாருக்கானுக்கு மோடி கொடுத்த பதில்! | போலி செய்தியை பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்! இயக்குனர் உதயநிதி | நினைத்தாலே இனிக்கும் சீரியலில் என்ட்ரியாகும் பிக்பாஸ் தாமரை செல்வி! | நான் கொஞ்சம் 'ரக்கட்': பாம்புவுடன் கொஞ்சி விளையாடும் பார்வதி! | என்.டி.ராமா ராவ் நூற்றாண்டு பிறந்தநாள் | நடிகர் கமல்ஹாசனுக்கு ‛வாழ்நாள் சாதனையாளர்' விருது : ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார் | அஞ்சலியின் 50வது படம் 'ஈகை': பர்ஸ்ட் லுக் வெளியீடு |
மீடியாக்களின் வருகை, குறிப்பாக யு-டியூப் சேனல்களின் ஆதிக்கம் பெருகிய பின்பு, தியேட்டர்களில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, படம் பார்த்துவிட்டு வரும் பார்வையாளர்களிடம் படம் குறித்த அவர்களது கருத்துக்களை, விமர்சனங்களை கேட்டு அவற்றை தங்களது சேனல்களில் ஒளிபரப்பி வருகின்றனர். இதனால் நல்ல படங்களுக்கு பிரச்சனை இல்லை. அதேசமயம் மிகவும் எதிர்பார்க்கப்படும் பல படங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான கோணத்தில் அந்த படத்தை பற்றி விமர்சனங்கள் வெளியாவதால் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து கேரள தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது இதுபோன்ற மீடியாக்கள், யு-டியூப் சேனல்கள் தியேட்டருக்குள் நுழைந்து படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடம் கருத்து கேட்பதற்கு அதிரடியாக தடை விதித்துள்ளது கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். அதே சமயம் தியேட்டருக்கு வெளியே நின்று பொதுமக்களிடம் இதுபோன்ற சேனல்கள் கருத்து கேட்டால், அதில் நாங்கள் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது. இந்த புதிய உத்தரவின் மூலம் இனிவரும் நாட்களில் படங்களின் வசூல் கூடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.