பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

மீடியாக்களின் வருகை, குறிப்பாக யு-டியூப் சேனல்களின் ஆதிக்கம் பெருகிய பின்பு, தியேட்டர்களில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, படம் பார்த்துவிட்டு வரும் பார்வையாளர்களிடம் படம் குறித்த அவர்களது கருத்துக்களை, விமர்சனங்களை கேட்டு அவற்றை தங்களது சேனல்களில் ஒளிபரப்பி வருகின்றனர். இதனால் நல்ல படங்களுக்கு பிரச்சனை இல்லை. அதேசமயம் மிகவும் எதிர்பார்க்கப்படும் பல படங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான கோணத்தில் அந்த படத்தை பற்றி விமர்சனங்கள் வெளியாவதால் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து கேரள தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது இதுபோன்ற மீடியாக்கள், யு-டியூப் சேனல்கள் தியேட்டருக்குள் நுழைந்து படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடம் கருத்து கேட்பதற்கு அதிரடியாக தடை விதித்துள்ளது கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். அதே சமயம் தியேட்டருக்கு வெளியே நின்று பொதுமக்களிடம் இதுபோன்ற சேனல்கள் கருத்து கேட்டால், அதில் நாங்கள் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது. இந்த புதிய உத்தரவின் மூலம் இனிவரும் நாட்களில் படங்களின் வசூல் கூடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.