சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் | தங்கர் பச்சான் மகன் படத்தில் நடிக்கும் போது வலியை அனுபவித்து அழுதேன்: ஷாலி | எனது கதையைத்தான் திருடி இருக்கிறார்கள் : 'லாபத்தா லேடிஸ்' கதாசிரியர் குற்றச்சாட்டு | சினிமாவில் நடிப்பது எனது தனிப்பட்ட முடிவு : குஷ்பு மகள் அவந்திகா சொல்கிறார் | பிளாஷ்பேக்: முதல் செஞ்சுரி அடித்த சிவாஜி | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் காணாமல் போன நடிகை | 'ஸ்டன்ட் டிசைன்' ஆஸ்கர் விருது அறிவிப்பு: ராஜமவுலி மகிழ்ச்சி | சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' |
மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். கமர்சியல் ஆக்சன் படங்களுடன் துப்பறியும் த்ரில்லர் படங்களையும் கொடுப்பதில் வித்தகரான இவரது இயக்கத்தில் கடந்த 2006ல் மலையாளத்தில் சிந்தாமணி கொல கேஸ் என்கிற படம் வெளியானது. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நடைபெறும் விசாரணையை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் லால் கிருஷ்ணா விராடியார் என்கிற பிரபல வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி நடித்திருந்தார்.
இந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஷாஜி கைலாஷ். இதிலும் சுரேஷ்கோபியே கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல கதாசிரியர் ஏ.கே.சாஜன் எழுதுகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகில் இருந்து ஒதுங்கியது போல காணப்பட்ட இயக்குனர் ஷாஜி கைலாஷ், கடந்த ஆறு மாதங்களில் கடுவா, காபா, அலோன் ஆகிய மூன்று படங்களை இயக்கி விட்டார்.
தற்போது பாவனா கதாநாயகியாக நடித்து வரும் ஹன்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்துவிட்டு சிந்தாமணி கொல கேஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்குகிறார். இந்த படம் இவரது டைரக்ஷனிலேயே கடந்த 2008ல் தமிழில் நடிகர் ஆர்கே நடிக்க எல்லாம் அவன் செயல் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கேயும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.