சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். கமர்சியல் ஆக்சன் படங்களுடன் துப்பறியும் த்ரில்லர் படங்களையும் கொடுப்பதில் வித்தகரான இவரது இயக்கத்தில் கடந்த 2006ல் மலையாளத்தில் சிந்தாமணி கொல கேஸ் என்கிற படம் வெளியானது. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நடைபெறும் விசாரணையை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் லால் கிருஷ்ணா விராடியார் என்கிற பிரபல வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி நடித்திருந்தார்.
இந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஷாஜி கைலாஷ். இதிலும் சுரேஷ்கோபியே கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல கதாசிரியர் ஏ.கே.சாஜன் எழுதுகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகில் இருந்து ஒதுங்கியது போல காணப்பட்ட இயக்குனர் ஷாஜி கைலாஷ், கடந்த ஆறு மாதங்களில் கடுவா, காபா, அலோன் ஆகிய மூன்று படங்களை இயக்கி விட்டார்.
தற்போது பாவனா கதாநாயகியாக நடித்து வரும் ஹன்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்துவிட்டு சிந்தாமணி கொல கேஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்குகிறார். இந்த படம் இவரது டைரக்ஷனிலேயே கடந்த 2008ல் தமிழில் நடிகர் ஆர்கே நடிக்க எல்லாம் அவன் செயல் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கேயும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.