எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா. இவர் தற்போது கோவாவில் உள்ள மாண்ட்ரோம் பகுதியில் பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்று கட்டி வருகிறார். சுமார் 100 கோடி மதிப்பில் இந்த பங்களா உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த பங்களா விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக புகார் எழுந்தது. உள்ளூர் சமூக நல ஆர்வலர்கள் இது குறித்து புகார் கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் கோவா பஞ்சாயத்து அதிகாரி அமித் சாவந்த் நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‛1994ம் ஆண்டின் பஞ்சாயத்து சட்டப்படி மாண்ட்ரோம் பகுதியில் புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டட பணிகளை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரம்பரியமான மாண்ட்ரோம் பகுதியில் புதிய கட்டடம் கட்டப்படக்கூடாது என்று விதிமுறை இருந்தும் அரசு அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு கட்டட பணிகளை கண்டு கொள்ளவில்லை. கடந்த ஒரு வருடமாக பணிகள் நடந்து வரும்போது இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இப்போது எதிர்ப்பு அதிகரித்தவுடன் கண்துடைப்புக்காக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர், என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.