‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியான பின்பு கதை உருவாக்கம் மற்றும் வியாபார ரீதியில் முன்னணி வரிசைக்கு நகர்ந்துள்ளது கன்னட சினிமா. இந்தநிலையில் தற்போது சமீபத்தில் வெளியான காந்தாரா என்கிற திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தென்னிந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.
கன்னட சினிமாவின் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்துள்ளார் நடிகர் பிரபாஸ். இதுபற்றி பிரபாஸ் கூறும்போது, “காந்தாரா படத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன்.. என்ன ஒரு அற்புதமான அனுபவமாக அது இருந்தது.. அருமையான கான்செப்ட் மற்றும் த்ரில்லிங் க்ளைமாக்ஸ்.. கட்டாயம் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய ஒரு படம் இது” என்று பாராட்டியுள்ளார்..