ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள 'ஆச்சார்யா' படம் கடந்த ஏப்ரல் 29ம் தேதி வெளியானது. தெலுங்கின் முன்னணி இயக்குனரான கொரடாலா சிவா இயக்கி இருந்தார். ராம்சரண் தயாரித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்து வினியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பாக சிரஞ்சீவியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ''ஆச்சார்யா படம் தோல்வியடைந்ததற்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். படம் நஷ்டமானதையடுத்து நானும் ராம் சரணும் படத்திற்காக பெற்ற ஊதியத்தில் 80 சதவீதத்தை திருப்பி கொடுத்துவிட்டோம். ஆச்சார்யா படம் குறித்த எந்த குற்ற உணர்வும் எனக்கில்லை'' என தெரிவித்துள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள 'காட் பாதர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.