பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் தேவரகொண்டா குறிப்பிடத்தக்கவர். இவர் நடித்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட பல படங்கள் வெற்றி பெற்றதால் தற்போது அவரை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டுகளில் படம் தயாரிக்கிறார்கள். அந்த வகையில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் தற்போது விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ள இந்த படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்று(ஆக.,25) வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் படத்துக்கு படம் விஜய் தேவர கொண்டா தனது சம்பளத்தை உயர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது ஆரம்பத்தில் 5 கோடி, 10 கோடி என்று சம்பளம் வாங்கி வந்த விஜய் தேவரகொண்டா தற்போது நடித்துள்ள லைகர் படத்தில் நடிக்க 20 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால் புதிய படங்களில் நடிக்க பன்மடங்கு சம்பளத்தை உயர்த்துவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளாராம். அதன் காரணமாகவே புதிய படங்களில் இன்னும் கமிட்டாகாமல் உள்ளதாக டோலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி உள்ளன.




