ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் தேவரகொண்டா குறிப்பிடத்தக்கவர். இவர் நடித்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட பல படங்கள் வெற்றி பெற்றதால் தற்போது அவரை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டுகளில் படம் தயாரிக்கிறார்கள். அந்த வகையில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் தற்போது விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ள இந்த படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்று(ஆக.,25) வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் படத்துக்கு படம் விஜய் தேவர கொண்டா தனது சம்பளத்தை உயர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது ஆரம்பத்தில் 5 கோடி, 10 கோடி என்று சம்பளம் வாங்கி வந்த விஜய் தேவரகொண்டா தற்போது நடித்துள்ள லைகர் படத்தில் நடிக்க 20 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால் புதிய படங்களில் நடிக்க பன்மடங்கு சம்பளத்தை உயர்த்துவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளாராம். அதன் காரணமாகவே புதிய படங்களில் இன்னும் கமிட்டாகாமல் உள்ளதாக டோலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி உள்ளன.