‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
மலையாளத்தில் நடிகர் நடிகர் திலீப் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வாய்ஸ் ஆப் சத்தியநாதன். இந்த படத்தை பிரபல கமர்சியல் இயக்குனர் ரபி இயக்கி வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜோஜூ ஜார்ஜ், அனுபம் கெர் மற்றும் வில்லனாக ஜெகபதிபாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த வருடமே துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது கோல்கட்டாவில் இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தின் கதை பஹத் பாசிலுக்காகத்தான் முதலில் உருவாக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தின் ஒன்லைனை இயக்குனர் ரபியிடம் கொடுத்து டெவலப் பண்ண சொன்னதே பஹத் பாசில் தானாம். ஆனால் முழு ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்து முடித்ததும், பஹத் பாசில் இந்த கதையை கேட்டுவிட்டு இது நான் நடிக்க வேண்டிய படமே அல்ல.. என்னை விட கமர்ஷியலான நடிகர் ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று கூறி ஒதுங்கி விட்டாராம். அந்த சமயத்தில் தான், ரபியிடம் நாம் இணைந்து படம் பண்ணலாம், கதை இருக்கிறதா என்று நடிகர் திலீப் கேட்டுள்ளார். ரபி இந்த கதையை சொன்னதுமே திலீப்புக்கு உடனே பிடித்து போய்விட, அப்படி துவங்கியதுதான் இந்த வாய்ஸ் ஆப் சத்தியநாதன் படம்” என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.