ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த ஒரு வருடமாகவே பான் இந்தியா என்கிற வார்த்தை தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்ல, பாலிவுட்டையும் சேர்த்து ஆட்டி வைத்து வருகிறது. ஹிந்தி படங்கள் தென்னிந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவதும், அதேபோல தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் வெளியாவதும் என பல இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்கள் பான் இந்தியா படங்களில் நடிப்பதை விரும்புகின்றனர். இந்த நிலையில் பான் இந்தியா என்பதையும் தாண்டி உலக அளவில் செல்லுங்கள் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் மலையாள நடிகர் குஞ்சாக போபன்.
குஞ்சாக்கோ போபன் மலையாளத்தில் நடித்த அறிவிப்பு என்கிற படம் தற்போது லோகர்னோவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக லோகர்னோ வந்துள்ள குஞ்சாகோ போபன் இது குறித்து கூறும்போது, “எனது 25 வருட திரையுலக பயணத்தில் முதன்முறையாக ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இனி பான் இந்தியா என்பதை விட 'கோ குளோபல்' என்று அனைவரும் ஆசைப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் குஞ்சாகோ போகன்.