அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
1980களில் முன்னணியில் இருந்த மலையாள இயக்குனர் ஜி.எஸ்.பணிக்கர். இகாகினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஷோபா, இந்திரபாலன், ரவிமேனன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது. இதை தொடர்ந்து வாசரஸய்யா, சகியன்டே மகன், பிராகிரிதி மனோகரி, பூத்தன்பாண்டி , பாண்டவபுரம் உட்பட பல படங்களை இயக்கினார்.
பின்னர் சொந்தமாக படம் தயாரித்த பணிக்கர் அதன் மூலம் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மிட் சம்மர் ட்ரீம்ஸ் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் அந்த படம் தொடங்க இருந்த நேரத்தில் அவருக்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக படத்தை தொடங்காமல் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நோய் தாக்கம் அதிகமாகவே சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.