தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற படத்தின் மூலம், தான் அறிமுகமான காலகட்டத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி. தமிழில் எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் சுதா கொங்கர இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தபின் தென்னிந்திய அளவில் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார்.
இந்த படத்தில் அவர் நடித்த பொம்மி கதாபாத்திரத்திற்கு அப்போதே ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், தற்போது அதை உறுதி செய்யும் விதமாக அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த மாதம் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா பாலமுரளி. அந்த படமும் வெற்றி பட வரிசையில் இணைந்த நிலையில், தற்போது தேசிய விருதும் இவரை தேடி வந்துள்ளதால் முன்னணி நடிகைகள் வரிசைக்கு உயர்ந்துள்ளார் அபர்ணா பாலமுரளி.
அந்த வகையில் தற்போது அபர்ணாவின் மீது வெளிச்சம் விழுந்துள்ள நிலையில், அதையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல், இவர் மலையாளத்தில் நடித்து வந்த சுந்தரி கார்டன்ஸ் என்கிற திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாக இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காமெடி நடிகரான நீரஜ் மாதவ் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி.