'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் என்கிற படத்தின் மூலம், தான் அறிமுகமான காலகட்டத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி. தமிழில் எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் சுதா கொங்கர இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தபின் தென்னிந்திய அளவில் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார்.
இந்த படத்தில் அவர் நடித்த பொம்மி கதாபாத்திரத்திற்கு அப்போதே ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், தற்போது அதை உறுதி செய்யும் விதமாக அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த மாதம் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா பாலமுரளி. அந்த படமும் வெற்றி பட வரிசையில் இணைந்த நிலையில், தற்போது தேசிய விருதும் இவரை தேடி வந்துள்ளதால் முன்னணி நடிகைகள் வரிசைக்கு உயர்ந்துள்ளார் அபர்ணா பாலமுரளி.
அந்த வகையில் தற்போது அபர்ணாவின் மீது வெளிச்சம் விழுந்துள்ள நிலையில், அதையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல், இவர் மலையாளத்தில் நடித்து வந்த சுந்தரி கார்டன்ஸ் என்கிற திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாக இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காமெடி நடிகரான நீரஜ் மாதவ் என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி.