பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். பிரித்விராஜ், பிஜுமேனன் இணைந்து நடித்த இந்த படத்தை மறைந்த இயக்குனர் சாச்சி இயக்கியிருந்தார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 68 வது தேசிய விருது பட்டியலில் இந்த படம் மூன்று விருதுகளை வென்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் நடித்த நடிகர் வினீத் தட்டில் டேவிட் என்பவர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இந்த வினீத் டேவிட்..
போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி வினீத் டேவிட்டுக்கும், அலெக்ஸ் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. நேற்று இரவு வினித்தின் வீட்டிற்கு அலெக்ஸ் சென்றபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வினீத் தன்னிடம் இருந்த கத்தியால் அலெக்ஸை தாக்கியதில் அவருக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின்படி திருச்சூர் போலீசார் நேற்று வினீத் தட்டில் டேவிட்டை கைது செய்தனர்.