பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
சிரஞ்சீவியின் நடிப்பில் தற்போது காட்பாதர், போலோ சங்கர், இது தவிர அவரது 154வது படம் என மூன்று படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. இதில் சிரஞ்சீவியின் 154வது படத்தை இயக்குனர் பாபி இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தநிலையில் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மலையாள நடிகர் பிஜுமேனன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் வில்லன், குணச்சித்திர நடிகர் என படிப்படியாக வளர்ந்து தற்போது ஹீரோ, கதையின் நாயகன் என வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார் பிஜுமேனன். இதற்கு முன்னதாக தெலுங்கில் 2006-ல் வெளியான கதர்நாக், ரணம் என இரண்டு படங்களில் நடித்துள்ள பிஜுமேனன், கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவி படம் மூலமாக தெலுங்கில் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.