ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

அகண்டா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 107வது படத்த்தை கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி, ஹனி ரோஸ், லால் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார்.
50 சதவிவித படப்பிடிப்புகள் முடிந்திருந்தாலும் இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. என்பிகே 107 என்கிற தற்காலிக தலைப்போடு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அண்ணாரு என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஜெய் பாலையா என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலகிருஷ்ணாவை ஜெய் பாலைய்யா என்று அன்போடு அழைப்பார்கள். அதையே படத்திற்கு தலைப்பாக்க முடிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.




