தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல மலையாள தயாரிப்பாளரும் குணச்சித்திர நடிகருமான விஜய்பாபு மீது துணை நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல் 22ம் தேதி காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்த விஜய்பாபு சமூக வலைதளத்தில் வீடியோ மூலமாக சம்பந்தப்பட்ட நடிகையின் அடையாளத்தையும் வெளிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் மீது அடுத்தடுத்து இரண்டு வழக்குகள் பதியப்பட்ட நிலையில் அவர் போலீஸில் கைதாவதை தவிர்க்க வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். தொடர்ந்து ஐந்து வாரங்களாக தலைமறைவாக இருந்த அவர் அங்கிருந்தபடியே முன் ஜாமினுக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவர் கேரளா திரும்பினால் மட்டுமே அவரது ஜாமின் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.
இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமையே கேரளா திரும்பி திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜராவதாக உத்தரவாதம் அளித்தார் விஜய்பாபு. ஆனாலும் சொன்னபடி திங்களன்று அவர் கேரளா திரும்பவில்லை இந்த நிலையில் கொச்சி விமான நிலையம் மூலம் கேரளா வந்தடைந்தார் விஜய்பாபு. விமான நிலையத்தில் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் உண்மை என்ன என்பது விரைவில் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.