ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பிரபல பின்னணி பாடகர் கேகே நேற்று (ஜூன் 1) மாரடைப்பால் திடீரென காலமானார். இந்த செய்தி இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரதமர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். பாலிவுட் பாடகராக அறியப்பட்ட கேகே என்கிற கிருஷ்ணகுமார் ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக தமிழில் அவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன.
அதேசமயம் மலையாளத்தில் அவர், பிரித்விராஜ் நடிப்பில் 2009ல் வெளியான புதியமுகம் என்கிற படத்தில் இடம்பெற்ற ரகசியமாய் என்கிற ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடியுள்ளார். அதுமட்டுமல்ல கேரளாவை பூர்வீகமாக கொண்ட பாடகர் கேகே மலையாளத்தில் ஒரே ஒரு பாடலை பாடி இருப்பது தான் ஆச்சரியமான விஷயம்.
அந்த பாடலை பாடி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு அவரிடம், நீங்கள் ஏன் மலையாளத்தில் பாடுவது இல்லை என அவரிடம் கேட்கப்பட்டபோது, “மற்ற மொழிகளை விட மலையாளத்தில் வார்த்தைகளை உச்சரிப்பது எனக்கு சற்று சிரமமானதாகவே இருக்கிறது, மற்ற மொழிகளில் பாடும்போது அவற்றுக்கு தோதாக எனக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி எழுதி பாடிக்கொள்ள முடிகிறது. ஆனால் மலையாளத்தில் அவ்வாறு செய்ய முடிவதில்லை இத்தனைக்கும் நான் பேசும் மலையாளம் நன்றாக இருக்கிறது நீங்கள் பாடலாமே என்று பலரும் கூறினாலும் எனக்கு அது ஏற்புடையதாக தெரியவில்லை” என்று அப்போது கூறியிருந்தார் பாடகர் கேகே.