போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
பிரபல பின்னணி பாடகர் கேகே நேற்று (ஜூன் 1) மாரடைப்பால் திடீரென காலமானார். இந்த செய்தி இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரதமர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். பாலிவுட் பாடகராக அறியப்பட்ட கேகே என்கிற கிருஷ்ணகுமார் ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக தமிழில் அவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன.
அதேசமயம் மலையாளத்தில் அவர், பிரித்விராஜ் நடிப்பில் 2009ல் வெளியான புதியமுகம் என்கிற படத்தில் இடம்பெற்ற ரகசியமாய் என்கிற ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடியுள்ளார். அதுமட்டுமல்ல கேரளாவை பூர்வீகமாக கொண்ட பாடகர் கேகே மலையாளத்தில் ஒரே ஒரு பாடலை பாடி இருப்பது தான் ஆச்சரியமான விஷயம்.
அந்த பாடலை பாடி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு அவரிடம், நீங்கள் ஏன் மலையாளத்தில் பாடுவது இல்லை என அவரிடம் கேட்கப்பட்டபோது, “மற்ற மொழிகளை விட மலையாளத்தில் வார்த்தைகளை உச்சரிப்பது எனக்கு சற்று சிரமமானதாகவே இருக்கிறது, மற்ற மொழிகளில் பாடும்போது அவற்றுக்கு தோதாக எனக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி எழுதி பாடிக்கொள்ள முடிகிறது. ஆனால் மலையாளத்தில் அவ்வாறு செய்ய முடிவதில்லை இத்தனைக்கும் நான் பேசும் மலையாளம் நன்றாக இருக்கிறது நீங்கள் பாடலாமே என்று பலரும் கூறினாலும் எனக்கு அது ஏற்புடையதாக தெரியவில்லை” என்று அப்போது கூறியிருந்தார் பாடகர் கேகே.