தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் |

தெலுங்கு சின்னத்திரையுலகின் முன்னணி நடிகை கட்டா மைதிலி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் தான் கொடுத்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதை கண்டித்து நான் தற்கொலை செய்ய போகிறேன், என்று போலீசாருக்கே போன் செய்து கூறிவிட்டு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், போன் சிக்னலை வைத்து அவருடைய வீட்டைக் கண்டுபிடித்தனர். அங்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.