எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

கடந்த சில வாரங்களாக மோகன்லால், மம்முட்டி ஆகியோர் நடித்த படங்கள் எல்லாம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின. இதனால் ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என யோசித்து வந்து மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் எல்லாம் தற்போது தைரியமாக தங்களது படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்து வருகின்றனர்.. அந்தவகையில் இன்று(மே 27) மலையாளத்தில் வெளியாகும் நான்கு படங்களில் குட்டாவும் சிக்ஷையும் மற்றும் ஜான் லூதர் என இரண்டு படங்கள் அதிரடி போலீஸ் கதையாக உருவாகி உள்ளன.
இதில் குட்டாவும் சிக்ஷையும் படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் கம்மட்டிப்பாடம் படத்தின் இயக்குனருமான ராஜீவ் ரவி இயக்கி உள்ளார். இளம் நடிகரான ஆசிப் அலி இதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தனது கதாபாத்திரத்திற்கு காக்க காக்க சூர்யாவின் நடிப்பை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
அதேபோல ஜான் லூதர் என்கிற படத்தில் நடிகர் ஜெயசூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுவும் ஒரு அதிரடி போலீஸ் கதாபாத்திரம்தான். இந்த படம் ஒரு க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ளது. அபிஜித் ஜோசப் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே சில படங்களில் ஜெயசூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் அவற்றிலிருந்து இந்தப் படமும் கதாபாத்திரமும் மாறுபட்டு இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார். அந்த வகையில் இந்த இரண்டு போலீஸ் படங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ளன.




