‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த வாரம் தமிழில் துல்கர் சல்மான் நடித்த ஹே சினாமிகா என்கிற படம் வெளியானது. பிருந்தா மாஸ்டர் இயக்கியிருந்த இந்த படம் காதலை மையப்படுத்தி உருவாகியிருந்தது. தியேட்டரில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் சல்யூட் திரைப்படம் வரும் மார்ச் 18ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த படம் தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது.. இந்த அறிவிப்பு துல்கர் சல்மானின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காரணம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடித்த குரூப் திரைப்படம் தியேட்டரில் வெளியானது. அதேபோல ஹே சினாமிகா படமும் தியேட்டரில் தான் வெளியானது. குரூப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதைவிட அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, துல்கர் சல்மான் முதன் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சல்யூட் படத்தை தியேட்டரில் ஆரவாரத்துடன் பார்த்து ரசிக்க ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக இருந்தனர். ஆனால் தற்போது பொங்கிய பாலில் தண்ணீர் ஊற்றியது போல இந்த படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு அவர்களை அப்செட் ஆகி உள்ளது உண்மைதான்.