ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

கடந்த நான்கு வருடங்களுக்கு முன் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி, சிறை சென்று, ஜாமினில் மீண்டு வந்தார் பிரபல மலையாள நடிகர் திலீப். கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு மெதுவாக நகர்ந்து வந்த நிலையில், சமீபத்தில் நடிகர் திலீப்பின் நண்பரும் இயக்குனருமான பாலச்சந்திர குமார் அவருக்கு எதிராக திரும்பி, இந்த வழக்கு குறித்த சில பரபரப்பான தகவல்களை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கு சம்பந்தமாக புதிதாக சிலரை விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். நீதிமன்றமும் அதற்கான அனுமதி அளித்துள்ளது.
அதே சமயம் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்று எண்ணிய நடிகர் திலீப் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே தனக்கு முன்ஜாமின் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். ஏற்கனவே இரண்டு முறை இந்த முன் ஜாமின் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம் அந்த மனுவை விசாரித்தது.
ஆனால் போலீஸார் தரப்பில், தற்போது கிடைத்த கூடுதல் தகவலின்படி இந்த வழக்கில் இன்னும் தங்களது விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் தேவை என கூறப்பட்டதால், இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்தவகையில் மூன்றாவது முறையாக முன்ஜாமின் மனு விசாரணை தள்ளிப்போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




