ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஒருவரை கடந்த 2017ம் ஆண்டு மர்ம நபர்கள் கடத்தி சென்று பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கினர். இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பலாத்காரத்திற்கு தூண்டியதாக கைது செய்யப்பட்ட திலீப் 84 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக திலீபின் நண்பரும் இயக்குனருமான பாலசந்திர குமார் கொடுத்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவில் சத்தம் போதாது என்று அந்த வீடியோவை ஸ்டூடியோவில் கொடுத்து 20 மடங்கு சத்தத்தை உயர்த்தி திலீப் கேட்டு மகிழ்ந்தாகவும், விசாரணை அதிகாரியை லாரி ஏற்றி கொல்ல குடும்ப உறுப்பினர்களுடன் திட்டமிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து திலீப், அவரது சகோதரர் அனூப், மைத்துணர் சூரஜ், அப்பு, பாபு உள்பட 6 பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் விசாரணையை சிதைக்கும் பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கில் போதிய ஆதாரமில்லை என திலீப் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாக்குமூலமும், வழக்கும் திலீபுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இந்த புதிய வழக்கு தொடர்பாக தான் கைதாகலாம் என்பதால் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் திலீப்.