நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் குரூப் என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள சல்யூட் என்கிற படம் வரும் ஜனவரி 14 அன்று ரிலீஸ் செய்ய இருப்பதாக கடந்த மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை துல்கர் சல்மானின் சொந்த நிறுவனமான வே பாரர் பிலிம்ஸ் தான் தயாரித்துள்ளது தற்போது ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்து பரவிவரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.
இந்த படத்தில் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் துல்கர் சல்மான். இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் ஏற்கனவே மும்பை போலீஸ் என்கிற அதிரடி போலீஸ் படத்தை இயக்கியதால், இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
இதை குறிப்பிட்டுள்ள துல்கர் சல்மான் உங்கள் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தாலும் சமூக நோக்கில் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதால், இந்த சமயத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது என்று தள்ளி வைத்துள்ளோம் என கூறியுள்ளார்