ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் குரூப் என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள சல்யூட் என்கிற படம் வரும் ஜனவரி 14 அன்று ரிலீஸ் செய்ய இருப்பதாக கடந்த மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை துல்கர் சல்மானின் சொந்த நிறுவனமான வே பாரர் பிலிம்ஸ் தான் தயாரித்துள்ளது தற்போது ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்து பரவிவரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.
இந்த படத்தில் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் துல்கர் சல்மான். இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் ஏற்கனவே மும்பை போலீஸ் என்கிற அதிரடி போலீஸ் படத்தை இயக்கியதால், இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
இதை குறிப்பிட்டுள்ள துல்கர் சல்மான் உங்கள் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தாலும் சமூக நோக்கில் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதால், இந்த சமயத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது என்று தள்ளி வைத்துள்ளோம் என கூறியுள்ளார்