'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் குரூப் என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள சல்யூட் என்கிற படம் வரும் ஜனவரி 14 அன்று ரிலீஸ் செய்ய இருப்பதாக கடந்த மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை துல்கர் சல்மானின் சொந்த நிறுவனமான வே பாரர் பிலிம்ஸ் தான் தயாரித்துள்ளது தற்போது ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்து பரவிவரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.
இந்த படத்தில் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் துல்கர் சல்மான். இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் ஏற்கனவே மும்பை போலீஸ் என்கிற அதிரடி போலீஸ் படத்தை இயக்கியதால், இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
இதை குறிப்பிட்டுள்ள துல்கர் சல்மான் உங்கள் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தாலும் சமூக நோக்கில் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதால், இந்த சமயத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது என்று தள்ளி வைத்துள்ளோம் என கூறியுள்ளார்