பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? |
கடந்த 2020ல் இவ்வுலகை விட்டு பிரிந்துசென்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மறைவு தமிழ் திரையுலகம் மட்டும் மட்டுமல்லாமல், மொழி தாண்டி அனைத்து இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தநிலையில் கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சுரேஷ்கோபி, இளையராஜாவின் இசையில் எஸ்பிபி பாடிய இளையநிலா பொழிகிறதே என்கிற பாடலை பாடி மணமக்களையும் அங்கு வந்திருந்தவர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் இன்னிசை கச்சேரியை நடத்திய வயலினிஸ்ட் சபரீஷ் பிரபாகர் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மேலும் சுரேஷ்கோபி இந்த பாடலில் சில வரிகளை மட்டும் பாடினாலும், அவர் எஸ்பிபி பாடலை பாடினர் என்பதாலேயே அந்த அரங்கம் முழுதும் எழுந்த கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆனதாக கூறியுள்ளார் சபரீஷ் பிரபாகர். நடிகர் சுரேஷ்கோபி தற்போது தமிழரசன் என்கிற படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.