காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கடந்த 2020ல் இவ்வுலகை விட்டு பிரிந்துசென்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மறைவு தமிழ் திரையுலகம் மட்டும் மட்டுமல்லாமல், மொழி தாண்டி அனைத்து இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தநிலையில் கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சுரேஷ்கோபி, இளையராஜாவின் இசையில் எஸ்பிபி பாடிய இளையநிலா பொழிகிறதே என்கிற பாடலை பாடி மணமக்களையும் அங்கு வந்திருந்தவர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் இன்னிசை கச்சேரியை நடத்திய வயலினிஸ்ட் சபரீஷ் பிரபாகர் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மேலும் சுரேஷ்கோபி இந்த பாடலில் சில வரிகளை மட்டும் பாடினாலும், அவர் எஸ்பிபி பாடலை பாடினர் என்பதாலேயே அந்த அரங்கம் முழுதும் எழுந்த கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆனதாக கூறியுள்ளார் சபரீஷ் பிரபாகர். நடிகர் சுரேஷ்கோபி தற்போது தமிழரசன் என்கிற படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




