ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
கடந்த 2020ல் இவ்வுலகை விட்டு பிரிந்துசென்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மறைவு தமிழ் திரையுலகம் மட்டும் மட்டுமல்லாமல், மொழி தாண்டி அனைத்து இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தநிலையில் கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சுரேஷ்கோபி, இளையராஜாவின் இசையில் எஸ்பிபி பாடிய இளையநிலா பொழிகிறதே என்கிற பாடலை பாடி மணமக்களையும் அங்கு வந்திருந்தவர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் இன்னிசை கச்சேரியை நடத்திய வயலினிஸ்ட் சபரீஷ் பிரபாகர் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மேலும் சுரேஷ்கோபி இந்த பாடலில் சில வரிகளை மட்டும் பாடினாலும், அவர் எஸ்பிபி பாடலை பாடினர் என்பதாலேயே அந்த அரங்கம் முழுதும் எழுந்த கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆனதாக கூறியுள்ளார் சபரீஷ் பிரபாகர். நடிகர் சுரேஷ்கோபி தற்போது தமிழரசன் என்கிற படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.