இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று (பிப்.,22) நடக்கிறது. சென்னை தனியார் கல்லூரியில் ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதில் முரளி ராமசாமி, தமிழ் குமரன் தலைமையில் இரண்டு அணிகள் மோதுகின்றன ,1540 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள்.
தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், இணை செயலாளர் செயற்குழு உறுப்பினர்கள் 26 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்துகிறார். இன்று மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு நிறைவடைகிறது. அதை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இன்று இரவுக்குள் முக்கிய நிர்வாகிகளுக்கான ஓட்டு முடிவுகள் வெளிவர வாய்ப்பு. நாளை செயற்குழு உறுப்பினர்கள் யார் என்று தெரிய வரும். இப்போதைய தலைவர் முரளி ராமசாமி வெற்றி பெறுவாரா, லைகா தமிழ் குமரன் வெற்றி பெறுவாரா என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.




