நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று (பிப்.,22) நடக்கிறது. சென்னை தனியார் கல்லூரியில் ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதில் முரளி ராமசாமி, தமிழ் குமரன் தலைமையில் இரண்டு அணிகள் மோதுகின்றன ,1540 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள்.
தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், இணை செயலாளர் செயற்குழு உறுப்பினர்கள் 26 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்துகிறார். இன்று மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு நிறைவடைகிறது. அதை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இன்று இரவுக்குள் முக்கிய நிர்வாகிகளுக்கான ஓட்டு முடிவுகள் வெளிவர வாய்ப்பு. நாளை செயற்குழு உறுப்பினர்கள் யார் என்று தெரிய வரும். இப்போதைய தலைவர் முரளி ராமசாமி வெற்றி பெறுவாரா, லைகா தமிழ் குமரன் வெற்றி பெறுவாரா என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.